நீ போவதற்கு முன்
ஓர் முறை என்னிடம் வா!
வாழ்வின் பரிமாணத்தை
மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.
பிரிய நண்ப,
காலத்தில் பழியைப் போடாமல்
கண் விழிந்திருப்போம்
காலத்தின் கரங்களுடன் கைகுலுக்க
கடற்கரைக்கு வா!
வெயிலாற அலையோங்கும் காட்சியினை
கைகோர்த்துப் பார்த்திருப்போம்
துயரத்தைத் துரத்திவிட்டு.
11.12.1989
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக