20120319

சலனம்

உங்களின் நேசம்
ன்னை அடையவில்லை!
 
அன்பு தவழ்ந்த முகத்தில்
அழகு இருந்தது!

உங்களின் இதயத்தைக் கவரும்
நோக்கமும் எனக்கில்லை.

கடந்து போகும் பாதசாரியில்
ஒருவனாய்....!

உங்களை ஏற்றிப் போற்ற
என்னிதயம் அவாவவில்லை

ஆயினும்
உங்களின் நினைவு என்னில் பதிந்தது
ஏனென்று தெரியவில்லை!

மாரிகால மழையிரவில்
மனந்தனித்து போனது!

இனிய நினைவுகளை ஏந்தி
இதயம் நெகிழ்ந்து போனது!

23.10.1987

கருத்துகள் இல்லை: