பாய்ந்து
செல்லும்
அலைகளில்
சலனம்
கடலின்
அணைப்பில்
சிறுநண்டின்
கவினுலகம்
'விழிகள்
மலர்கல்ல
கொடிய
கொடிய
கண்கள்
கயல்களல்ல
கூற்றம்
கூற்றம்'
'யானும்
நீயும்
எவ்வழி
அறிதும்'
அலைகள்
மணற்பரப்பில்
கொஞ்சி
விளையாட
உதித்த
அதிகாலையில்
நான் அளைந்த மண்ணில் வெகுதொலைவில்
அவள் தந்த அனைத்துக்கும் சாட்சியாய்
நான் மலர்ந்தேன்
எங்கள்
அதிர்வுகள்
லயத்துடன்
எழுந்தன.
மலர்ந்திருந்த மாலையில் உணர்ந்து கொண்டோம்
வாழ்வு
மகிழ்ச்சியானதும் தான்
கோபித்துக்
கொண்டு
கோடை போனதும்
அழகொளிர
வந்தது
வேனில்
வானம்
வீசும்
பெருந்துளிகளில் நனைகிறது காதல்.
அனலடித்த
நாட்கள்
விலகிப்போகட்டும்
குளிர்
உறைக்கும்
கொடுநாட்களும் கடந்து செல்லட்டும்
இளங்காலையில்
வசந்தமெனைத்
தட்டியெழுப்பட்டும்.
11.10.1991
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக