இதயம் அழுந்தித் துடிக்கிறது எதையோ இழந்தாற்போல்
நெஞ்சம் அதிர்கிறது
நாம் பிரிந்து போகிறோம்
தவிர்க்க முடியா இந்த பிரிவும் இந்த வாழ்வும்
பள்ளி உறவுகளும் நினைவுகளும்
நாங்கள் பிரிகிறோம்
நீங்கள் என்ன எண்ணுகின்றீர்கள்
கற்பனை கனவுகளை ஏந்திய ஓடங்களின் அசைவு
கனத்துப்போன நினைவுகள் ஏந்திய ஓடங்கள் எங்கெங்கோ
ஆறுகள் கடல்கள் தாண்டப பிரிந்து பிரிந்து தனித்து
நீண்ட பாதை காடுகள் மலைகள் ஆறுகள் பாலை நிலங்கள்
இன்னும் எத்தனையெத்தனை
எவற்றைப் பற்றியும் அஞ்சவில்லை
பிரிவின் வேதனையை எப்படியுரைக்க
உங்கள் கரங்களை அழுத்திப்பிடித்துக் கொள்கிறேன்.
எங்கள் உறவுகளில் ஆழ்ந்த அர்த்தம் பரவட்டும்
நான் எனது பாதைக்கு செல்ல ஆயத்தமாகிறேன்.
நல்லது மிக நல்லது நாம் விடை கொள்வோம்
19880314
திசை , முகம் 43 (1989.11.03) பக்கம் 9,
K. பாபு என்ற வீட்டிலும் ஊரிலும் அறிந்த பெயரில் வெளிவந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக