கையெட்டும்
தொலைவில்
ஊர்களும் பயின்ற முகங்களும்;
போயிருந்திருக்கலாம்
யாரும் காணாமல்
களவாகவாவது
பொழுதுசாய்கையில்
எழுகின்ற
முகங்கள்
காற்றோடும்
மண்ணோடும்
கடலோடும்
கரையோடும்
கரைந்த முகங்கள்
உர்ரென்ற
முகங்கள்
களையிழந்த
ஏராளமேராளம் முகங்கள்
உயிரோம்பும்
முகங்கள்
கண்ணெட்டும்
தூரத்தில்
மெய்நிகர்த்
தளங்களும்
மெய்நிகர்
முகங்களும்
வியர்ப்பதுமில்லை
யாரும்
விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை.
04.01.2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக