20120321

எதிரொலி

 

சத்தமிட்ட வண்ணம்

மலைகள் ஆறுகள் காடுகள் கடல்கள் வெளிகள் தாண்டி

தூரத்தூரப் போகும் எதிரொலியை

துரத்திப் பிடிக்க நான் ஓடிக்கொண்டிருந்தேன்

பட்டபகலில் குப்பி விளக்குகளுடன்

தத்வஞானிகள் பாதையில் சரிந்து கிடக்கையில்

இடரிவிழாதிருக்க தாண்டித் தாண்டி ஓடிக்கொண்டிருந்தேன்

எதிரொலியைக் கேட்பதற்காக



1991



சரிநிகர் இதழ் 58 (ஒக்டோபர் 1994)

கருத்துகள் இல்லை: