சத்தமிட்ட வண்ணம்
மலைகள் ஆறுகள் காடுகள் கடல்கள் வெளிகள் தாண்டி
தூரத்தூரப் போகும் எதிரொலியை
துரத்திப் பிடிக்க நான் ஓடிக்கொண்டிருந்தேன்
பட்டபகலில் குப்பி விளக்குகளுடன்
தத்வஞானிகள் பாதையில் சரிந்து கிடக்கையில்
இடரிவிழாதிருக்க தாண்டித் தாண்டி ஓடிக்கொண்டிருந்தேன்
எதிரொலியைக் கேட்பதற்காக
1991
சரிநிகர் இதழ் 58 (ஒக்டோபர் 1994)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக