நிர்மலமான வானத்தில்
தனித்தலையும்
பறவை தரும் வேதனையை
நீ தர வேண்டாம்!
மீட்கப்பட முடியா வேதனை போல்
என்னிளமை
ஏக்கமுற வைக்கிற ஏதோ ஒன்று
எங்கிருக்கிறதென்
இழந்து போன நாட்கள்?
சொற்களற்று குரலற்று
முகமற்று உணர்வற்று
தூரத்தூர கண்காணா தேசத்தின்
கல்லறை முகவரிகளைத் தேடிக் கொண்டு
நீ போனாய்!
ஆயிரம் ஆண்டுகள்
கதை பேசும் வடுக்களைத் தந்துவிட்டு
வெற்று வரிகளில் மயங்கி
வெற்றுடலாய் நீ போனாய்!
பறவையே வேண்டாம்
ஒரு வேதனை போல்
இருந்து விட்டுப் போ.
நீ பார்ப்பது நானல்ல
நான் யாரோ
எதற்கோ பலியாகி விட்டவன்!
09.02.1992
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக