அதிகாலையில்
அமைதியை கிழித்து இயற்றப்படும்
முதற்காற்றைப் போல் உன் நினைவுகள்
என் ஆத்மா பாடலிசைக்கும் நேரம்
நீயில்லை என உணர்ந்த போது
நான் வேதனையுற்றேன்
நீர் ஊற்றுக்களை
உள்ளுணரும் பழங்கால மனிதன் போல்
நீண்டகாலம் அலைந்தேன்
வனாந்தரங்களின் மணற்படுகையின் கீழ்
நதிகள் பாய்வதை நான் கண்டுகொண்டேன்.
1992
மூன்றாவது மனிதன் இதழ் 10 (ஜனவரி 2001)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக