எந்த உண்மை எம்மை இணைத்தது
எந்த பேருண்மை பிரித்தது.மிக வேகமாய் பயணித்த போதும்
வரண்ட நிலங்களை தாண்ட முடியவில்லை.
சில நண்பர்களைப் பெற்றுக் கொண்டேன்.
தேவதைகள் நிறைந்த கனவூகள்
கலைந்த விடியாலைப் பொழுது
கண்முன் எதுவூம் எஞ்சவில்லை.
எத்தனை தரந்தான் இப்படி எழுதுவது.
ஜீவனும் உணர்வூமாய் இத்தனை மனிதர்கள்
வாழ்ந்து போனபின் மனதில் பதித்த வரிகளை மீறி
எதுவூம் சொல்லப்படவூள்ளதா?
தயை கூர்ந்து என் ஆன்மா நாணமுற சபித்துவிடுங்கள்
இன்று விடைகோரும் கடிதங்களை வரைவேன்.
1993
வெளியீடு: சரிநிகர் இதழ் 58 (27 ஓக்டோபர் 1994)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக