போகிற போக்கில்
விளம்பர வரிகளுடன் இனங்கண்டு விட்டு
சம்பந்தமில்லாதது போல்
போகப் போகிற மனிதரை எண்ணிச்
சஞ்சலப்படுகிறேன்.
அவளைப் பற்றி
பளிச்சிடும் வரியை
இனியும் எழுதாமலிருக்க முடியாது!
சும்மா கொட்டிவிட்டுப் போகிற
வார்த்தையைப் போலவா.
சேதிகளைத் விதைத்துப்போனவள்.
நிகழ்த்திக் காட்டியவள்!
செவ்வான விளிம்பெங்கும்
பொங்கும் கடலில்
கடலடியில் திரிந்தவள்!
கரையில் மீட்கப்பட்டதும்
காதோடு காதாய் காற்று வழி போனது!
மரணத்தைத் தேடிப் போனாள்
பேராறாய் கடலில் காவியமானாள்!
செருக்கப்பட்ட சிறு மொட்டே
நீயெண்ணாக் காலத்திற்கும்
உன் ஆன்மா துடிக்கப் போகின்றது!
சாம்பலைக் கடலில் கரைத்த
பிதாவே கூறும்.
சகோதரரே நீர் கூறும்.
கடலில் ஏன் கரைத்தாள்.
12.04.1996
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக