இப்போது கேட்கவில்லை.
அனேகமாக எல்லோரும்
போய் விட்டார்கள்.
எங்கு என்ற கேள்வி வேண்டாம்
போரின் கனத்த குரல்
ஒலிக்கும் போது
கேள்விகளைக் குறைத்துக் கொள்வோம்
அது மிகவும் நல்லது
இப்போதும் கேள்விகள் வேண்டாம்!
நிலவு காலிக்கும் வேளையில்
நீண்ட தூரம் செல்வேன்.
இரைச்சலை விழுங்கிய இரவு
எவ்வளவு அருமையானது!
இது தான்
என் அமைதியைப் பறித்தது.
03.10.1990
வெளியீடு: சரிநிகர் இதழ் 60: 25 நவம்பர் 1994
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக