20120321

இழப்பு

கதவினைத் திறந்து வைத்தேன்.

போகின்ற காற்று என் கதவைத்

தட்டிவிட்டுப் போனது போல்.....

 நான் விழித்திருந்தேன் நெடுநேரம்

கதைப்பதற்கு ஜீவனின்றி.



என் கனவூகளுக்கு

உரம்போட யாரும் வரவில்லை!

இனி நடைத்துணையை எங்கு தேட.


ஆத்மா உறங்குமென்று

இரவுகளில் விழித்திருந்தேன்.
 

கனவு கூட இனியில்லையென்று

போகின்ற காற்று (நீதான்!)

என் கதவைத் தட்டிவிட்டுப் போனது போல்!

ஆனாலும் நான் விழித்திருந்தேன் நெடுநேரம்.



13.01.1990


கருத்துகள் இல்லை: