20120321

முகம்

விடிந்த பொழுது!

எல்லோரும் முகமூடியூடன் எழுந்தனர்.

நான் மட்டும் முகத்தைத் தொலைத்துவிட்டு.

அவர்களுடன் கைகோர்த்து

கதைப்பதற்கு எழுந்த போது

சொற்களை மறுத்து குரல் மாறிப் போனார்கள்!


எல்லோரும் தத்தம் கனவூகளில்

புதைந்து கிடந்தனர்,

என் கனவுகளைக் கூட

அவர்களால் அனுமதிக்க முடியவில்லை.


14.12.1989


கருத்துகள் இல்லை: