20120321

மலரினைச் சாத்துமென்!



இரத்தமூறிடும் கால இடுக்கில்

புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு

மலரினைச் சாத்துமென்!

மரண ஊற்றில் கரைந்தவர்

முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்

உயிர்களை இழந்தும்

ஆழப்பாயூம் வேர்களின் வீர்யம்

மண்தான் அறியூம்!



இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்

எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொரு

மலரினைச் சாத்துமென்!



17.11.1990



வெளியீடு: சரிநிகர் இதழ் 58 (27 ஒக்டோகர்)

கருத்துகள் இல்லை: